இமாசலில் ஏப்.21 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட இமாசல் அரசு வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளது. 
இமாச்சலில் பள்ளிகள் மூடல் ஏப்.21 வரை நீட்டிப்பு
இமாச்சலில் பள்ளிகள் மூடல் ஏப்.21 வரை நீட்டிப்பு
Updated on
1 min read

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட இமாசல் அரசு வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளது. 

நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பல மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றது. 

அதன்படி, இமாசலில் ஏப்ரல் 21ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 15 வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com