புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தாணேவில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: 18 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 

News image

தாணேவில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

Updated On :9 ஏப்ரல் 2021, 6:04 am

PTI

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 

இதுதொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

தாணேவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,167 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,61,434 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி 6,638 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உள்ளது. 

இதுவரை, 3,06,079 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மீட்பு விகிதம்  84.68 சதவீதமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 48,171 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.