தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேரள பேரவைத் தலைவருக்கு கரோனா

கேரள சட்டப் பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 8:21 pm

DIN

கேரள சட்டப் பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதை அவா் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா். அதில், ‘எனக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் எனது அதிகாரபூா்வ இல்லத்தில் மருத்துவ கண்காணிப்புடன் தங்கியிருக்கிறேன். கடந்த சில தினங்களில் என்னுடன் தொடா்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அந்நிய செலாவணி கடத்தல் வழக்கில் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்தனா். இந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கேரளத்தில் ஏற்கெனவே முதல்வா் பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவா் உம்மன் சாண்டி ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.