இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகின்றது. அந்தவகையில் கடந்த 48 மணி நேர நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 7,225 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 2,83,229 ஆகவும், பலி எண்ணிக்கை 1,610 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,053 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தலைநகர் பாட்னாவில் ஞாயிறு நிலவரப்படி 1,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.