டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கரோனா அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும்: சண்டீகர் நிர்வாகம்

கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
கரோனா அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும்: சண்டீகர் நிர்வாகம்
Updated On :27 ஜனவரி 2024, 8:00 pm

ANI

கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பொதுமுடக்கம் பொருளாதாரத்தை முடக்குகிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே பொதுமுடக்கம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும். தொடர்ந்து கரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகத்தின் ஆலோசகர் மனோஜ் பரிடா கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது, 

நகரத்தில் கரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் யூனியன் பிரதேசத்தில் ஏற்கெனவே ஏப்ரல் 7 முதல் இரவு 10 மணியிலிருந்து, காலை 5 மணி வரை இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளது. 

மாநிலத்தில் ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு 20 ஆகக் குறைந்தது. ஆனால், தற்போது 350-400 ஆக உயர்ந்துள்ளது. சண்டீகரில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதனால் கரோனா பரவுவதைத் தடுக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

சண்டீகரில் திங்கள் நிலவரப்படி 424 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் 31,167 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.