புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்

கேரளத்தின் இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்

Updated On :13 ஏப்ரல் 2021, 2:44 am


திருவனந்தபுரம்: கேரளத்தின் இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளத்தில் இடுக்கி, திரிசூர், மலப்புரம், பாலக்காடு, கோக்கோடு, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் ஒரு சில பகுதிகளில் 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. மழை பெய்யும் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு பகுதிக்கு இன்றும், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு பகுதிகளுக்கு நாளையும் மஞ்சல் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.