இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகாராஷ்டிரத்தில் 61% அதிதீவிர கரோனா: ஆய்வில் தகவல்

மகாராஷ்டிரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 61 சதவிகிதம் அதிதீவிர கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

News image
Updated On :14 ஏப்ரல் 2021, 7:10 am

DIN

மகாராஷ்டிரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 61 சதவிகிதம் அதிதீவிர கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிதீவிர கரோனா தொற்றுக்காக மத்திய அரசிடம் இருந்து எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளையும் இதுவரை பெறவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புணேவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால இடைவெளியில் பரிசோதனை செய்யப்படும் 361 மாதிரிகளில் 220 மாதிரிகளுக்கு அதிதீவிர கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் மீண்டும் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், அதிதீவிர கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிதீவிர கரோனாவை கண்டறிய சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் தரப்படவில்லை என்றும், பழைய முறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.