ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சத்தீஸ்கர் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஏப்.26 வரை பொதுமுடக்கம் அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிஜாப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 26 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :15 ஏப்ரல் 2021, 2:39 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிஜாப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 26 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. இதனைத்தடுக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர 11 நாள் பொதுமுடக்கம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 16 முதல் 26 வரை மாவட்டம் முழுவதும் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் கரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரித்தேஷ் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.