ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உ.பி.யில் 10 மாவட்டங்களில் இரவு பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இரவு பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :15 ஏப்ரல் 2021, 10:05 am

DIN

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இரவு பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றன. 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள இரவு பொதுமுடக்கத்திற்கான கால அளவை நீட்டித்து புதிய அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி லக்னோ, நொய்டா, ப்ரக்யாராஜ் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 7 லட்சத்து 44 ஆயிரத்து 21 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.