ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி, பஞ்சாப், ஹரியாணாவிற்கு இலவச ஆக்ஸிஜன்: இந்தியன் ஆயில் நிறுவனம்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2021, 12:31 pm

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது.

அம்மூன்று மாநிலங்களிலுள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 150 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

ஒருசில மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்க வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மூன்று மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு 150 மெட்ரிக் டன் இலவச ஆக்ஸிஜன் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.