மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர் தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான மருந்துகளை எடுத்து வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.