ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கிய மத்திய அரசு

கரோனா பேரிடரின் மத்தியிலும் வெளிநாடுகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதியை மத்திய அரசு இரட்டிப்பாக்கியது தெரிய வந்துள்ளது.

News image
பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கிய மத்திய அரசு
Updated On :21 ஏப்ரல் 2021, 12:53 pm

DIN

கரோனா பேரிடரின் மத்தியிலும் வெளிநாடுகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதியை மத்திய அரசு இரட்டிப்பாக்கியது தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று 2ஆம் அலையின் காரணமாக பல்வேறு தரப்பினரும் தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். தொற்று பாதித்தவர்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுவது அதிகரித்துள்ளதால் உடனடியாக சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பேரிடர் மத்தியிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆக்சிஜனின் அளவு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது சமீபத்திய அறிக்கையில் வெளிவந்துள்ளது.

2019-20ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆக்சிஜனின் அளவு 4502 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் 2020-21ஆம் நிதியாண்டில் 9300 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மத்திய அரசின் செயல்பாடு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

எனினும் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் ஏற்றுமதியில் மத்திய அரசு எத்தகைய மாறுதல்களையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள மத்திய செய்திதொடர்புத் துறை தொழில்துறைக்கான ஆக்சிஜன் ஏற்றுமதி தான் உயர்த்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.