டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற உதவிய தில்லி காவல்துறை

தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 32 கரோனா நோயாளிகளுக்காக தில்லி காவல்துறையினர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

News image
Updated On :21 ஏப்ரல் 2021, 8:55 am

DIN

தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 32 கரோனா நோயாளிகளுக்காக தில்லி காவல்துறையினர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தில்லியின் ஜானக்புரி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் 32 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதாக அவசரத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கிர்டி நகர் பகுதியிலுள்ள ஆக்ஸிஜன் விநியோகிக்கும் இடத்திலிருந்து காவல்துறையினர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.

காவலர்களின் உதவியுடன் 11 சிலிண்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.