ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவத்திற்கு 0.4% ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி: அரசு தகவல்

தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை ஒப்பிடுகையில், மருத்துவத்திற்கு 0.4 சதவிகித ஆக்ஸிஜன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2021, 11:08 am

DIN


தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை ஒப்பிடுகையில், மருத்துவத்திற்கு 0.4 சதவிகித ஆக்ஸிஜன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியன் ஆயில் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஆக்ஸிஜன் வழங்கி வருகின்றன. 

YouTube video thumbnail

இந்நிலையில், தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை ஒப்பிடுகையில், மருத்துவத்திற்கு 0.4 சதவிகித ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரை 9884 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் மருத்துவத்திற்காக 12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் ஆக்ஸிஜன் அளவை விட இது 0.4 சதவிகிதமாகும். இதேவேளையில் கடந்த டிசம்பர் - ஜனவரி மாதங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் அளவு 2,675 மெட்ரிக் டன்னிலிருந்து 1,418 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.