தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

புதிய கரோனா பாதிப்புகள்: 10 மாநிலங்களிலிருந்து மட்டும் 76 சதவிகிதம்

நாட்டில் புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 76 சதவிகிதத்தினர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2021, 11:26 am


நாடு முழுவதும் புதிதாக 2,95,041 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

இதில் 76 சதவிகிதத்தினர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் தினசரி பாதிப்பு 62,097 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 29,574 பேருக்கும், தில்லியில் 28,395 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 10 மாநிலங்களில் கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களும் உள்ளன. 

நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,57,538 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 13.82 சதவிகிதம்.

24 மணி நேரத்தில் மேலும் 2,023 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் 82.6 சதவிகிதம் பேர் 10 மாநிலங்களில் மட்டும் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.