ஆங்கில நாளிதழ் ஒன்றில், நேற்று வெளியான செய்தியில், கோவிஷீல்டு மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலை உயர்வானது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சௌவூதி, வங்கதேசம், தென்னாப்ரிக்க நாடுகள் கொடுத்த கரோனா தடுப்பூசிக்கான விலையை விட மிக அதிகம். இந்தியாவிலேயே தயாரித்த மருந்து, ஆனால் இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படுவதா? கரோனா தடுப்பூசியை ரூ.150க்கு விற்பனை செய்தாலே சீரம் நிறுவனத்துக்கு அதிகமான லாபம் கிடைக்கும். நிச்சயமாக விலை குறைக்கப்பட வேண்டும் என்று பதிவிடப்பட்டிருந்தது.