காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஆக்ஸிஜன் பற்றாக்குறை: மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் நோயாளிகள்

தில்லி சரோஜ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2021, 10:54 am

DIN


தில்லி சரோஜ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சரோஜ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு இல்லாததால் பழைய நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். அதேசமயம், புதிய நோயாளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சரோஜ் மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுப் பிரிவுக்கான பொறுப்பாளர் கூறுகையில்,

"ஆக்ஸிஜன் கையிருப்புக்கான விநியோகம் இன்னும் பெறப்படவில்லை. எங்களிடம் 70 நோயாளிகள் உள்ளனர். அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர். ஆக்ஸிஜன் தேவை உள்ளது. ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படவில்லை என்றால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டுவிடும். நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம்" என்றார்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி தில்லியில் 92,029 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.