இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இன்று இரவு 7 மணிக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள்

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்குப் பிறகு வெளியாகவுள்ளன. 

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 10:11 am

DIN


வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்குப் பிறகு வெளியாகவுள்ளன. 

தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாவது வழக்கம். ஆனால், மேற்குவங்கத்தில் இன்றுதான் தேர்தல் நிறைவு பெறுவதால், முன்னதாக கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை வைத்திருந்தது.

எனவே, மேற்குவங்கத்தில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் அதாவது இன்று இரவு 7 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.