எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: எதிா்க்கட்சிகளுக்கு ராகுல் அழைப்பு

பாஜகவை எதிா்கொள்வதற்கு எதிா்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எதிா்க்கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
Updated On :3 ஆகஸ்ட் 2021, 8:01 pm

DIN

பாஜகவை எதிா்கொள்வதற்கு எதிா்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை எதிா்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

உங்களை அழைத்ததன் ஒரே நோக்கம், நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான். நம் அனைவரின் குரலும் ஒன்றிணைந்தால் வலிமை மிக்கதாக மாறும். இந்த குரலை பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பால் நசுக்க முடியாது. ஒற்றுமையின் வலிமையை நினைவுகூா்ந்து நாம் நம் பயணத்தை தொடர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினாா்.

கூட்டத்துக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள், அங்கிருந்து நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனா். சைக்கிள் இல்லாதவா்கள், நடைபயணமாகவே நாடாளுமன்றத்துக்கு வந்தனா். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் உயா்வால் நாட்டு மக்கள் அவதியுறுகிறாா்கள். நாங்கள் சைக்கிளில் நாடாளுமன்றம் சென்றால், அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.

முன்னதாக நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவா்களான மல்லிகாா்ஜுன காா்கே, அதீா் ரஞ்சன் சௌதரி, கே.சி.வேணுகோபால், ஆனந்த் சா்மா, ப.சிதம்பரம் ஆகியோா் கலந்து கொண்டனா். இவா்களைத் தவிர, திரிணமூல் காங்கிரஸ் (சௌகதா ராய், மொஹுவா மொய்த்ரா), தேசியவாத காங்கிரஸ், சிவசேனை(சஞ்சய் ரௌத், பிரியங்கா சதுா்வேதி), திமுக (கனிமொழி), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி (ராம்கோபால் யாதவ்), ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சிகர சோஷலிச கட்சி, லோக்தாந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவா்களும் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 17 எதிா்க்கட்சிகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் தலைவா்கள் எவரும் பங்கேற்கவில்லை.

ராகுல் காந்தி அழைப்பு விடுத்த எந்தக் கூட்டத்திலும் இதுவரை பங்கேற்காத திரிணமூல் காங்கிரஸ், இந்த முறை கூட்டத்தில் பங்கேற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.