நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாடாளுமன்ற ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி தனித்தனியே ஆலோசனை: புதிய வியூகம் வகுக்கப்படுமா?

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மோடி தலைமையில் ஆளும் கூட்டணியும், ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

News image

நாடாளுமன்ற ஆளும்கட்சி - எதிர்க்கட்சி தனித்தனியே ஆலோசனை

Updated On :3 ஆகஸ்ட் 2021, 6:29 am

DIN

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மோடி தலைமையில் ஆளும் கூட்டணியும், ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 10வது நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ய காலை உணவுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஆம் ஆத்மி உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில், பிற கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் போட்டி நாடாளுமன்றம் நடத்துவது தொடர்பாகவும் முடுவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஆளும் கூட்டணியின் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.