ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

4.5 கோடி மதிப்பிலான செம்மரம் கடத்தல் - இருவர் கைது 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செம்மரக் கட்டைகளை வெட்டி  பதுக்கிவைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

News image
4.5 கோடி மதிப்பிலான செம்மரம் கடத்தல் , இருவர் கைது 
Updated On :5 ஆகஸ்ட் 2021, 12:07 pm

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செம்மரக் கட்டைகளை வெட்டி  பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வனத்தில் இருக்கும் மதிப்புமிக்க மரங்களில் ஒன்றான செம்மரத்தை கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக வெட்டி ரகசியமாக வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கொண்டு செல்கிறார்கள் என்கிற தகவலை அறிந்த பெங்களூரு கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் சந்திப் பாட்டில் கடத்தல் கும்பலை கைது செய்யும் நோக்கில் தனிப்படை ஒன்றை அமைத்தார்.

பின் சோதனையில் ஈடுபட்டு இதில் சம்பந்தப்பட்ட முக்கியக் குற்றவாளிகள் இருவரை கைது செய்தனர் . விசாரணையில்  , வெட்டி எடுத்துவரப்பட்ட செம்மரத்தில் ஒரு சின்ன பகுதியை அறுத்து அதைக்காட்டி  பெரிய வியாபாரிகளிடம் பேரம் பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் இவர்களுக்கு பின் இருக்கும் குற்றவாளிகளையும் காவல்துறை தேடிவருகிறது.

பிடிபட்ட இருவரின் பெயர்கள் ஆனந்தகுமார் (51) , அணில் சிங் (47) என தெரியவந்திருக்கிறது. அவர்கள் மறைத்து வைத்திருந்த செம்மரக் கட்டைகளின் மொத்த எடை 9,135 கிலோ என்றும் அதன் சந்தை மதிப்பு 4.5 கோடி என்றும் தெரிவித்ததோடு கடத்தல்காரர்களின் லாரி மற்றும் காரை  காவல்துறை பறிமுதல் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.