அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ராகுல்காந்தி போராட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தில்லி நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:50 am

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தில்லி நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் விலையானது ரூ.100-ஐ கடந்து விற்பனையாகிவருகிறது. அதேபோல் டீசலும் ரூ.90-ஐ கடந்துள்ளது.  உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்ற பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தின்போது மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சினர் முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, “பிரதமர் மோடி வேலைவாய்ப்பு குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பல இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பிரதமர் மோடி பறித்துள்ளார்” எனவும் ராகுல் காந்தி விமரிசித்தார்.

மேலும் பெகாஸஸ் உளவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த மறுத்துவருவதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.