விவசாயிகளுக்கு ஆதரவு: ஜந்தர் மந்தர் செல்லும் எதிர்க்கட்சிகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று ஜந்தர் மந்தர் செல்லவுள்ளதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவு: ஜந்தர் மந்தர் செல்லும் எதிர்க்கட்சிகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று ஜந்தர் மந்தர் செல்லவுள்ளதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக தில்லி ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜந்தர் மந்தருக்கு செல்லவுள்ளதாக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com