கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,805 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 36 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கர்நாடகத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,805 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,15,317-ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | டிவிட்டரில் தோனிக்கு மீண்டும் 'ப்ளூ டிக்'
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,741-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,854 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் 28,54,222-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | ஆந்திரத்தில் புதிதாக 2,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 24,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.