மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெங்களூரு மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து மருத்துவர் தற்கொலை

எம்எஸ் ராமையா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் ஒருவர், மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image
பெங்களூரு மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து மருத்துவர் தற்கொலை
Updated On :6 ஆகஸ்ட் 2021, 10:32 am

DIN


பெங்களூரு: எம்எஸ் ராமையா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் ஒருவர், மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

45 வயதாகும் பேராசிரியர், புதன்கிழமை காலை, மருத்துவமனை கட்டடத்தின் 8வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பணிச்சுமையே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டு பலியான டாக்டர் அம்பரீஷ் விஜய் ராகவ், சைக்காலஜித் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். புதன்கிழமை காலை வழக்கம் போல பணிக்கு வந்தவர், உடன் பணியாற்றுபவர்களிடமும் சாதாரணமாகவே இருந்துள்ளார்.

இரவு 11.45 மணியளவில், அவர் மருத்துவமனைக் கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது கார் பழுதுபார்க்கச் சென்றிருந்தது குறித்து அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர். அதுவே அவரை கடைசியாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அவரது மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எந்த பிரச்னை குறித்தும் தன்னிடம் ஆலோசிக்க மாட்டார் என்றும், சில மாதங்களாக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.