
குஜராத்தில் உள்ள சிறிய ஆற்றில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குஜராத் வதோதராவில் உள்ள ஒரு சிறிய ஆற்றில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை அம்மாநில வனத்துறை அலுவலர்கள் இன்று (செவ்வாய்கிழமை) மீட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் சைலேஷ் ராவல் கூறுகையில், "மலைப்பாம்பு ஒன்று குரங்கை விழுங்கியது. மலைப்பாம்பு மீட்கப்பட்ட பின்னர், விழுங்கிய குரங்கை வாந்தி எடுத்தது. தற்போது, நல்ல உடல்நலையில் உள்ளது. அனுமதி பெறப்பட்ட பிறகு, ஜம்புகோட வனவிலங்கு சரணாலயத்தில் மலைபாம்பு விடப்படும்" என்றார்.
ஆற்றில் இருந்த மலைப்பாம்பை மூன்று வனத்துறை அலுவலர்கள் மீட்டு கூண்டில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







