அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

நாட்டில் 11,649 திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணம்: மாநிலங்களவையில் தகவல்

நாடு முழுவதும் உள்ள 11,649 திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

நாடாளுமன்றம்

Updated On :11 ஆகஸ்ட் 2021, 11:25 am

DIN

நாடு முழுவதும் உள்ள 11,649 திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தின் போது திருநங்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கியது தொடர்பாக எழுத்துப்பூர்வ அறிக்கையை மத்திய அமைச்சர் நாராயணசாமி மாநிலங்களவையில் அளித்தார்.

“கரோனா பொதுமுடக்கத்தால் போடப்பட்ட பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த திருநங்கைகளுக்கு ரூ. 1,500 நிவாரண நிதி வழங்கப்பட்டன. முதல் அலையில் 5,711 பேருக்கு, இரண்டாம் அலையில் 5,938 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டன.

அதிகபட்சமாக தமிழகத்தில் முதல் அலையின் போது 1,036, முதல் அலையின் போது 710 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.