ஹிமாச்சல் நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக அச்சம்
ஹிமாச்சலப் பிரதேசம் கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வாகனங்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதாக அச்சம் கொள்ளப்படுகிறது.


ஹிமாச்சலப் பிரதேசம் கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வாகனங்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதாக அச்சம் கொள்ளப்படுகிறது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வாகனங்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது.
கின்னூர் மாவட்டம் ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் இன்று (புதன்கிழமை) மதியம் 12:45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, டிரக், அரசு பேருந்து மற்றும் பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய - திபெத் எல்லை படை மீட்பு பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த பல வாரங்களாக, ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்துவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...