மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

54 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்: பிரதமர் மோடி உரை

நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 3:11 am

DIN


நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

பிரதமர் மோடியின் உரை:

"பிரிவினையின்போது நாட்டு மக்கள் சந்தித்த துயரங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆகஸ்ட் 14-ஐ பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

கரோனா பெருந்தொற்றை இந்தியர்கள் மிகுந்த பொறுமையுடன் எதிர்கொண்டனர். நம்முன் பல சவால்கள் இருந்தன. ஆனால், அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வேகத்தில் செயல்பட்டோம். இந்தியத் தொழில் துறையினர் மற்றும் விஞ்ஞானிகள் பலத்தின் வெளிப்பாடுகள்தான் இவை. இன்றைக்கு நாம் தடுப்பூசிக்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.

தடுப்பூசி செலுத்தும் திட்டம் மிகப் பெரிய அளவில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருவதை நாம் பெருமையுடன் கூறலாம். இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

எல்லா நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளிலும் புதிய உறுதிமொழிகளுடன் முன்னோக்கி செல்வதற்கான ஒரு தருணம் வரும். அந்தத் தருணம் தற்போது இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் வந்துள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.