நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் மரியாதை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஆகஸ்ட் 2021, 7:16 am

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மரியாதை செலுத்தினார்.

அவருடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சி வாயிலாக, நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அவர், மக்கள் நலனுக்கான பிரச்னைகளை விவாதித்து முடிவு செய்யும் உயரிய அமைப்பான நாடாளுமன்றம், நாட்டின் ஜனநாயகத்தின் ஆலயமாகத் திகழ்கிறது என்றார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடா் அமளியால் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்ட நிலையில், அவா் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.