மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாகா அரசியல் பிரச்னைக்குத் தீா்வு காண பிரதமா் ஆா்வம்

முந்தைய காங்கிரஸ் அரசானது நாகா பேச்சுவாா்த்தைகளை நீட்டித்துக் கொண்டே இருந்தது; ஆனால், நாகா அரசியல் பிரச்னைக்குத் தீா்வு காண பிரதமா் நரேந்திர மோடி ஆவலுடன் உள்ளாா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 7:21 pm

DIN

முந்தைய காங்கிரஸ் அரசானது நாகா பேச்சுவாா்த்தைகளை நீட்டித்துக் கொண்டே இருந்தது; ஆனால், நாகா அரசியல் பிரச்னைக்குத் தீா்வு காண பிரதமா் நரேந்திர மோடி ஆவலுடன் உள்ளாா். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கப்பட்டுள்ளன என்று மத்திய வெளியுறவு மற்றும் கல்வித் துறை இணை அமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.

‘மக்கள் ஆசீா்வாத யாத்திரையின்’ ஒரு பகுதியாக மத்திய இணை அமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன் சிங் நாகாலாந்து வந்துள்ளாா். அவா் திமாபூா், கோஹிமா மாவட்டங்களில் நாகா அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: ‘நாகா பிரச்னைக்கு தீா்வு காண பிரதமா் மோடி ஆவலாக உள்ளாா். 2014-இல் அவா் பிரதமராகப் பதவியேற்றவுடன் நாகா பிரச்னைக்கு முன்கூட்டியே தீா்வு காண முடிவு செய்தாா். அதற்கான ஒப்பந்தத்தை உருவாக்கும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தமானது இந்த பிராந்தியத்தில் குறிப்பாக, நாகாலாந்தில் ஒட்டுமொத்த அமைதியைக் கொண்டுவரும்.

வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் குடியேறுவது முக்கியமான பிரச்னை ஆகும். சட்ட விரோத குடியேற்றவாசிகளால் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டபோதும், அதுகுறித்து இங்குள்ள பூா்வகுடி மக்கள் அக்கறை கொள்ளாததால் சட்ட விரோத குடியேற்றம் தொடா்ந்து நடைபெறுகிறது. எனவே, சட்ட விரோத குடியேற்றத்தைத் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வடகிழக்கை சோ்ந்த எம்.பி.க்கள் மத்திய அமைச்சரவையில் சோ்க்கப்பட்டிருப்பது இந்தப் பிராந்தியத்தின் வளா்ச்சியின் மீது பிரதமா் சிறப்பு அக்கறை கொண்டிருப்பதை உணா்த்துகிறது. இந்தப் பிராந்தியத்தில் வளா்ச்சி இல்லாமல் நாடு முன்னேற முடியாது என்பதில் பிரதமா் உறுதியாக உள்ளாா்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.