மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 4:02 pm

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகள் மாலை வெளியாகின. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,37,955 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

இதில் முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 1,01,704 பேர். இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 36,251 பேர்.

தில்லியில் இதுவரை மொத்தம் 1,19,55,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 85,63,920. இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள் 33,91,278 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில் 69,160 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 25 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.