மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாம்பை கழுத்தில் மாலையாக சுற்றியவருக்கு நேர்ந்த கதி

ஜார்க்கண்ட் மாநிலம் பாட்னா அருகே கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர், பாம்பை கழுத்தில் மாலையாகச் சுற்றியதில், பாம்பு கடித்து பலியானார்.

News image
பாம்பை கழுத்தில் மாலையாக சுற்றியவருக்கு நேர்ந்த கதி
Updated On :19 ஆகஸ்ட் 2021, 9:36 am

DIN


பாட்னா: ஜார்க்கண்ட் மாநிலம் பாட்னா அருகே கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர், பாம்பை கழுத்தில் மாலையாகச் சுற்றியதில், பாம்பு கடித்து பலியானார்.

கோயிலில் சாமி கும்பிட வீட்டிலிருந்து புறப்பட்ட ருனியா தேவி, வழியில் பாம்பை பார்த்து, அது கடவுள் அனுப்பிய தூதர் என நினைத்துக் கொண்டார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, பாம்புக்கு தீபாராதனைகள் காட்டி, அதனை ஏதோ மலர் மாலை போல எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினரும் பக்தி பரவசத்தோடு, பூஜைகளை நடத்தினர். சாமி பாடல்களைப் பாடியும் நடனமாடியும் கிராமத்தினர் பக்தி பரவசத்தில் ஆழந்திருந்தபோது, அந்த பாம்பு, ருனியாவைக் கொத்திவிட்டது.

விஷம் உடல் முழுக்க பரவ, மயங்கி விழுந்த ருனியாவை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அந்த கிராமத்திலிருந்த மந்திரவாதியிடம் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த மந்திரவாதியும் கிராமத்தில் இல்லாததால், வேறு வழியே இல்லாமல் ருனியா தேவி உயிரைவிட்டுள்ளார்.

அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தால் பிழைக்க வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.