மகாராஷ்டிரத்தில் கடந்த 7 மாதங்களில் குடும்பங்களைப் பிரிந்து மத்திய ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 477 சிறார்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு அவரவர் பெற்றோர்களுடன் ஒப்படைத்திருக்கிறார்கள்
மீட்கப்பட்ட 477 பேரில் 310 பேர் சிறுவர்கள் என்றும் 167 பேர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
முக்கியமாக கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை மும்பை , நாக்பூர் , பூசாவல், புணே மற்றும் சோலாபூர் ரயில் நிலையங்களில் அதிகமும் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
'பெரும்பாலும் வீட்டில் யாராவது அடித்தாலோ அல்லது குடும்ப பிரச்னைகளால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுக் கிளம்பி ரயில் நிலையங்களின் நடைமேடையிலோ அல்லது ரயிலிலோ தஞ்சம் அடைகிறவர்களை விசாரித்து பின் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்' என ரயில்வே பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.