ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை வீரா்கள் 12 போ் உள்பட 85 போ் கொல்லப்பட்டனா். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதக் குழு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "பிரிட்டனுக்கு அழைத்துவரப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் அளிக்கப்படும். கிட்டத்தட்ட 1,000 பேர் விமான நிலைத்தில் உள்ளனர்.
கூட்டத்தில் இருப்பவர்களில் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க வழி வகுக்கப்படும். ஆனால், ஒட்டு மொத்த மீட்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஒரி சில மணி நேரமே மிச்சமுள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


