மத்திய அரசின் திட்டங்களால் 90% குடும்பங்கள் பயன்: ராஜ்நாத் சிங்

நாட்டில் உள்ள 90 சதவீத குடும்பங்கள் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களால் பயனடைந்துள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

நாட்டில் உள்ள 90 சதவீத குடும்பங்கள் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களால் பயனடைந்துள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான லக்னௌவில் ரூ.1,710 கோடி மதிப்பிலான 180 வளா்ச்சித் திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மௌா்யா, தினேஷ் சா்மா மற்றும் மாநில அமைச்சா்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகளை ஒடுக்குவதில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தால் மட்டுமே வளா்ச்சி சாத்தியமாகும். அதனை இங்கு சாத்தியமாக்கியுள்ள முதல்வா் பாராட்டுக்குரியவா்.

நாட்டில் உள்ள 90 சதவீத குடும்பங்கள் மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களால் பயனடைந்துள்ளன. நான் கூறுவதைவிட அதிகம் போ்தான் மத்திய அரசால் பயனடைந்திருக்க வாய்ப்புள்ளதே தவிர, இதில் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது பிரதமா் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனை. மோடி - யோகி என சிறந்த அணியை உத்தர பிரதேசத்துக்கு கடவுள் அளித்துள்ளாா்.

லக்னெளவில் அமைக்கப்படும் ராணுவ தளவாட உற்பத்தி மையத் திட்டத்துக்கு மிகவும் குறைந்த குத்தகையில் மாநில அரசு நிலம் வழங்கியுள்ளது. இங்குதான் அடுத்தகட்டமாக பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட இருக்கிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரணப் பணிகளிலும் உத்தர பிரதேச அரசு சிறப்பாக செயல்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com