மத்திய பள்ளிக்கல்வி செயலா் அனிதா கா்வாலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறை செயலா்களும் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தும் பணிகளை செப்டம்பரில் நிறைவு செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்ட ஆசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்துவது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.