/

ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைகிறதா? நாடாளுமன்றத்தில் தரவுகள் தாக்கல்

ஜம்மு & காஷ்மீரில் 2018-க்கு பிறகு ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

News image
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர்
Updated On :1 டிசம்பர் 2021, 8:13 am

DIN


ஜம்மு & காஷ்மீரில் 2018-க்கு பிறகு ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

"ஜம்மு & காஷ்மீரில் ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் 2018-க்கு பிறகு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளன.

2018-இல் 143 ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்தன. நிகழாண்டில் நவம்பர் வரை 28 ஊடுருவல் சம்பவங்கள் மட்டுமே அரங்கேறியுள்ளன.

இதேபோல, 2018-இல் மட்டும் 417 பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நிகழாண்டில் நவம்பர் வரை மொத்தம் 244 பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன."

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.