உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தை தொடர்ந்து தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளைமுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் தொழிற்சாலைகள், வாகனங்களால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான காற்று மாசு நிலவி வருகின்றது. இதையடுத்து, தில்லி மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அலுவலக பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் இந்த வாரம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காற்று மாசு குறித்த வழக்கி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “வேலைக்கு செல்பவர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலில் குழந்தைகளுக்கு பள்ளியை திறந்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், 24 மணிநேரத்தில் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் நாளை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: ரிஷபம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மேஷம்

திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! - மு.க. ஸ்டாலின் அழைப்பு மடல்

போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

