பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகாராஷ்டிரம்: ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட 7 பேர் எங்கிருந்து வந்தவர்கள்?

மகாராஷ்டிரத்தில் புணேவைச் சேர்ந்த 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 டிசம்பர் 2021, 3:49 pm

DIN


மகாராஷ்டிரத்தில் புணேவைச் சேர்ந்த 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதன் விவரத்தை சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். சகோதரரைச் சந்திப்பதற்காக நைஜீரியாவிலிருந்து இரு மகள்களுடன் புணே வந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவருடன் தொடர்பிலிருந்த இரு மகள்கள், சகோதரர், சகோதரரின் மகன்கள் இருவர் என மொத்தம் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பரவியுள்ளது. மற்றொருவர் கடந்த வாரம் பின்லாந்திலிருந்து புணே திரும்பியுள்ளார்.

இதன்மூலம், மகாராஷ்டிரத்தில் மட்டும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவிலிருந்து தில்லி வழியாக நவம்பர் 23-ம் தேதி மும்பை வந்த நபருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.