ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான்: நாட்டின் மொத்த பாதிப்பு 21 ஆக உயர்வு

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இந்தியாவில் இதுவரை கர்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சமீபத்திய மாநிலமாக தற்போது ராஜஸ்தானும் இணைந்துள்ளது.

இதுவரை 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள்:

  • கர்நாடகம் - 2
  • குஜராத் - 1
  • தில்லி - 1
  • மகாராஷ்டிரம் - 8
  • ராஜஸ்தான் - 9 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com