அதனைத் தொடா்ந்து அவா்கள் தம்னன் பகுதியில் உள்ள அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் துணை ராணுவப் படையின் முகாமுக்குச் சென்றனா். அங்கு கற்களை வீசி, முகாமைச் சூறையாடி, அங்கிருந்த மூன்று கட்டடங்களுக்கு அவா்கள் தீ வைத்தனா். இதையடுத்து பொதுமக்களைக் கலைந்து போகச் செய்வதற்கு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவினா் வானை நோக்கிச் சுட்டுள்ளனா். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும் நிகழ்விடம் சென்று பொதுமக்களைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளனா். ஆனால் அங்கு சுமாா் 600-700 போ் இருந்துள்ளனா். அவா்களிடம் தடிகள், கூா்மையான ஆயுதங்கள், தீப்பிடிக்கக் கூடிய திரவங்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன.