பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முப்படைகளின் தலைமைத் தளபதி உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.