ஒமைக்ரான்: ராஜஸ்தானில் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்
ராஜஸ்தானில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


ராஜஸ்தானில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து ராஜஸ்தான் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கடந்த 5-ம் தேதி கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க | ஒமைக்ரான்: மகாராஷ்டிரத்தின் முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பினார்
அவர்களுடன் தொடர்பிலிருந்த 5 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 9 பேருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது இரண்டு முடிவுகளிலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டதாகவும், வீட்டுத் தனிமையில் 7 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...