மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நபருக்கு வியாழக்கிழமை தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்யான்-டோம்பிவிலி மாநகராட்சி ஆணையர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியது:
"மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட முதல் நபரான 33 வயது பொறியாளருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 7 நாள்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்."
இதையும் படிக்க | 57 நாடுகளில் ஒமைக்ரான் பரவல்: உலக சுகாதார அமைப்பு தகவல்
இவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர். நாட்டின் 4-வது நபர். இவர் தென் ஆப்பிரிக்காவின் கேப்டௌனிலிருந்து துபை மற்றும் தில்லி வழியாக நவம்பர் 24-ம் தேதி மும்பை வந்தடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


