காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நாடாளுமன்றத் தாக்குதல் நாள்: உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

News image
Updated On :13 டிசம்பர் 2021, 7:14 am

DIN

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; “2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றபோது, தங்கள் கடமையை நிறைவேற்றி உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். 
நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவை மற்றும் செய்த உயிர்த்தியாகம் ஆகியவை ஒவ்வொரு குடிமக்களையும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.”  இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த நிலையில் நாடாளுமன்றத் தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.