தில்லியில் நான்கு மாதத்தில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு
புது தில்லியில் ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆக இருக்கும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.


புது தில்லி: புது தில்லியில் ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆக இருக்கும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.
தலைநகர் புது தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 85 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்க அதிகமாகும். இதனால், கரோனா உறுதி செய்யப்படும் விகிதமும் 0.15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அதில், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒமைக்ரான் நோயாளிகள் நான்கு பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 5 ஒமைக்ரான் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ஒமைக்ரான் பாதித்த 10 பேரில் யாருக்கும் பாதிப்பு கடுமையாகவில்லை. வெளிநாடுகளிலிருந்து தில்லி வரும் ஏராளமான பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...