புது தில்லி: புது தில்லியில் ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆக இருக்கும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.
தலைநகர் புது தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 85 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்க அதிகமாகும். இதனால், கரோனா உறுதி செய்யப்படும் விகிதமும் 0.15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அதில், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒமைக்ரான் நோயாளிகள் நான்கு பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 5 ஒமைக்ரான் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ஒமைக்ரான் பாதித்த 10 பேரில் யாருக்கும் பாதிப்பு கடுமையாகவில்லை. வெளிநாடுகளிலிருந்து தில்லி வரும் ஏராளமான பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


