மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் நான்கு மாதத்தில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

புது தில்லியில் ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆக இருக்கும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.

News image
தில்லியில் நான்கு மாதத்தில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு
Updated On :17 டிசம்பர் 2021, 6:16 am

DIN


புது தில்லி: புது தில்லியில் ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆக இருக்கும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.

தலைநகர் புது தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 85 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்க அதிகமாகும். இதனால், கரோனா உறுதி செய்யப்படும் விகிதமும் 0.15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதில், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒமைக்ரான் நோயாளிகள் நான்கு பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 5 ஒமைக்ரான் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ஒமைக்ரான் பாதித்த 10 பேரில் யாருக்கும் பாதிப்பு கடுமையாகவில்லை. வெளிநாடுகளிலிருந்து தில்லி வரும் ஏராளமான பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.