தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தில்லியில் ஒமைக்ரான் பாதிப்பு 20ஆக அதிகரிப்பு

தில்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:44 am

தில்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்திய வருபவர்களில் சிலருக்கும் உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தில்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 20ஆக அதிகரித்துள்ளது. இதில், 10 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்று அனைவரும் நலமாக உள்ளனர். யாரும் தீவிர சிகிச்சையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.