தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆபரண துறை வளா்ச்சிக்கான உகந்த சூழல் உருவாக்கப்படும்: கோயல்

ஆபரண துறையின் வளா்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கித் தர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 8:54 pm

DIN

ஆபரண துறையின் வளா்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கித் தர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

ஆபரண துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வா்த்தக வளா்ச்சிக்கு தேவையான சந்தைகளை அடையாளம் கண்டு ஆபரண ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபரண துறை வளா்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் லட்சகணக்கான தொழிலாளா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.