மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குஜராத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: பாக். படகிலிருந்த 6 பேர் கைது

இந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு படகிலிருந்து ரூ. 400 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
பாக். படகிலிருந்த 6 பேர் கைது
Updated On :20 டிசம்பர் 2021, 2:27 am

DIN

இந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு படகிலிருந்து ரூ. 400 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோரக் காவல் படை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து குஜராஜ் கடற்பகுதியில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அல் ஹுசைனி என்ற படகில் மீன்பிடி படகில் ரூ. 400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து படகிலிருந்த 6 பேரைக் கைது செய்த கடலோர காவல் படையினர், போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.