இந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு படகிலிருந்து ரூ. 400 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோரக் காவல் படை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து குஜராஜ் கடற்பகுதியில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அல் ஹுசைனி என்ற படகில் மீன்பிடி படகில் ரூ. 400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படகிலிருந்த 6 பேரைக் கைது செய்த கடலோர காவல் படையினர், போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.